top of page
vuzhavar vurimai iyakkam logo.jpg

உழவர் உரிமை இயக்கம்

உழவர் உரிமை இயக்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு

வெட்ட வெட்ட தழைக்கும் வாழை தான் உழவர் உரிமை இயக்கம்


எந்தனை பொய் வழக்குகள் போட்டாலும் - சிறையில் அடைத்தாலும் உழவர் உரிமை இயக்கம்  எதற்கும் அஞ்சாமல் உழவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் மற்றும் உழவர்களின் உரிமையை மீட்கவும் தொடர்ந்து குரல் எழுப்பும்! போராடும்!!


திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட  *மலப்பாம்பாடி ஏரியில் பல ஆயிரம் டன் மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல புகார்கள் தெரிவித்தோம் ஆனால் மண் திருடர்கள் மீது நடவடிக்கை  எடுக்காமல் உழவர் உரிமை இயக்க நிர்வாகிகளை பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்தி* எங்களை முடக்க நினைத்து சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் 7 நாட்கள் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆன உடனே  ஏரி மண் திருட்டுக்கு எதிராக உறுதியோடு போராடி சிறைச்சென்று திரும்பிய  நிர்வாகிகளுக்கு உழவர் உரிமை இயக்கத்தில் புதிய நிர்வாகிகளாக  தேர்வு மற்றும் பதவி உயர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய  பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கம் தெற்கு ஒன்றியமாக செயல்பட்டு வந்த *திரு.ராமதாஸ் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் கிழக்கு மாவட்ட தலைவராகவும்* , செங்கம் மேற்கு ஒன்றிய  தலைவராக இருந்த *திரு செல்வம் அவர்கள் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட தலைவராகவும்*, நரடப்பட்டு கிளை தலைவராக இருந்த *திரு.கோவிந்தன் அவர்கள் செங்கம் தெற்கு ஒன்றிய தலைவராகவும்*, சந்தா நகர் கிளைச் செயலாளராக செயல்பட்டு வந்த *திரு.ராமமூர்த்தி அவர்கள் செங்கம் மேற்கு ஒன்றிய தலைவராகவும்*, மேல் செங்கம் கிழக்கு கிளை தலைவராக இருந்த *திரு மணிகண்டன் அவர்கள் வருவாய் துறை கண்காணிப்பு குழு தலைவராகவும்* அறிவிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.


மண் திருடர்களுக்கு ஆதரவாகவும் பொது மக்களுக்கும் எதிராகவும் செயல்படும்  திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திற்கு நாங்கள் சொல்வது என்னவென்றால், இன்னும் ஆயிரம் ஆயிரம் தலைவர்களை உழவர் உரிமை இயக்கம் உருவாக்கும். இலட்சக்கணக்கான சட்ட அறிவு பெற்ற தலைவர்களை உருவாக்கும்! உழவர்களுக்கான உரிமைகளை தொடர்ந்து பேசும்!! எந்த அச்சுறுத்தலையும் சிறையையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் உழவர் உரிமை இயக்கம்!!!


அப்பட்டமாக 11 பொய் வழக்குகள் போட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு 68 நாட்களில் சிறைமீண்ட தலைவர் எங்கள் தலைவர்.  சட்ட விரோத செயல்களை துணிவுடன் எதிர்கொள்ள எங்களை தயார் படுத்தி உள்ளார். அவரை போல் ஆயிரக்கணக்கான தலைவர்களை உருவாக்குவோம்! ஆம் *வெட்ட வெட்ட தழைக்கும் வாழை தான் உழவர் உரிமை இயக்கம்*!


உழவர்களின் உரிமை குரல் ஓங்கி ஒலிக்கும்!!


உழவர்களாய் ஒன்றிணைவோம்,

உரிமையை மீட்போம்!

bottom of page